IPL 2024, RCB: ஐபிஎல் 17 ஆவது சீசன் டிராபியை ஆர்சிபி வெல்ல வேண்டும் – சுரேஷ் ரெய்னா விருப்பம்!

Published : Feb 27, 2024, 12:12 PM IST
IPL 2024, RCB: ஐபிஎல் 17 ஆவது சீசன் டிராபியை ஆர்சிபி வெல்ல வேண்டும் – சுரேஷ் ரெய்னா விருப்பம்!

சுருக்கம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டிராபியை ஆர்சிபி கைப்பற்ற வேண்டும் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சேன்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஐபிஎல் அட்டவணை வெளியானதிலிருந்து ஒவ்வொரு அணியும் தீவிரமாக இறங்கி அதற்கான வேலைகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான டிராபியை ஆர்சிபி கைப்பற்ற வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியுள்ளார்.

இதுவரையில் ஒரு சீசன் கூட ஆர்சிபி டிராபியை கைப்பற்றியதே இல்லை. கடந்த 2009, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் மட்டுமே ஆர்சிபி இறுதி போட்டி வரை சென்று டெக்கான் சார்ஜஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்தது. ஒவ்வொரு முறையும் டிராபியை கைப்பற்ற கடுமையாக ஆர்சிபி போராடி வருகிறது. சிஎஸ்கே கடந்த முறை டிராபியை வென்ற நிலையில், இந்த முறை ஆர்சிபி டிராபியை வெல்ல வேண்டும்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

விராட் கோலி vs ரோஹித் சர்மா: இந்தூர் ஒருநாள் போட்டியின் கிங் யார்?
350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!