டி20 உலக கோப்பையில் இவங்க 2 பேரும் தான் தொடக்க வீரர்களாக இறங்கணும்..! லெஜண்ட் கவாஸ்கரின் அணி தேர்வு

By karthikeyan VFirst Published Sep 8, 2021, 6:48 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ள முன்னாள் ஜாம்பவான்  சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித்தும் கோலியுமே களமிறங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்று இரவு அறிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில், முன்னாள் ஜாம்பவானும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் 15 வீரர்களை கொண்ட டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், 3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவையும், 4ம் வரிசையில் கேஎல் ராகுலையும் இறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். சூழலுக்கு ஏற்ப 4ம் வரிசையில் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகிய மூவரில் ஒருவரை இறக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய நால்வரையும் தேர்வு செய்துள்ளார். இவர்களுடன் ஸ்பின்னராக யுஸ்வேந்திர சாஹலையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

கவாஸ்கர் தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, யுஸ்வேந்திர சாஹல்.
 

click me!