அவங்கலாம் ஒரு ஆளுங்கனு இவ்வளவு மதிப்பு கொடுத்திருக்க தேவையில்ல.. முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 24, 2019, 4:36 PM IST
Highlights

பும்ரா, ஷமி ஆகியோரின் அபாரமான பவுலிங்கால் ஆஃப்கானிஸ்தான் அணியை 213 ரன்களுக்கு சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்களை மட்டுமே அடித்தது. ஆனால் பும்ரா, ஷமி ஆகியோரின் அபாரமான பவுலிங்கால் ஆஃப்கானிஸ்தான் அணியை 213 ரன்களுக்கு சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அரைசதம் அடித்த கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, பொறுப்பு தோனி மேல் இறங்கியது. தோனியும் கேதரும் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை ஆடவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். 

அதேபோலவே தோனியும் கேதரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனால் ரொம்ப மந்தமாக ஆடியதால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. ஆனாலும் தோனி களத்தில் நின்றதால், வழக்கம்போல டெத் ஓவர்களில் அடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45வது ஓவரில் தோனி ஆட்டமிழந்தார். 

52 பந்துகள் பேட்டிங் செய்து 28 ரன்கள் மட்டுமே அடித்தார். கேதரும் மந்தமாகவே ஆடினார். விராட் கோலி 30.3 ஓவரில் அவுட்டாகும்போது இந்திய அணியின் ஸ்கோர் 135. அதன்பின்னர் கேதரும் தோனியும் 15 ஓவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வெறும் 57 ரன்கள் மட்டுமே அடித்தனர். அதை ஈடுகட்டும் விதமாக இருவரும் டெத் ஓவர்களிலும் அடித்து ஆடாமல் அவுட்டாகிவிட்டனர். அதனால் தான் இந்திய அணி 224 ரன்கள் என்ற குறைந்த ஸ்கோரை அடித்தது. பவுலர்களின் புண்ணியத்தால் இந்திய அணி வென்றது. 

ஸ்பின் பவுலர்களின் 34 ஓவர்களை ஆடி 119 ரன்கள் மட்டுமே இந்திய அணி அடித்தது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 150 பந்துகள் டாட் பந்துகள். இன்னிங்ஸின் பாதி பந்துகளில் ரன்னே அடிக்கவில்லை இந்திய அணி. அந்த 150 பந்துகளில் 50 சிங்கிள்கள் எடுத்திருந்தால் கூட ஸ்கோர் 274 ரன்கள் ஆகியிருக்கும். ஆனால் அதை செய்யவில்லை. அதனால் தான் 9 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. 

ஆனால் பவுலிங் சிறப்பாக இருந்ததால் இந்திய அணி வெற்றி பெற்றது. பொதுவாக ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக ஆடி மிடில் ஓவர்களில் ரன்ரேட் குறைந்துவிடாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மிகவும் மந்தமாக ஆடினர். தோனி - கேதர் ஜாதவின் மந்தமான பேட்டிங் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையே அதிருப்தியடைய செய்தது. அவரது அதிருப்தியை அவரே வெளிப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீகாந்த், இந்திய வீரர்கள் ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர்களுக்கு அதிக மதிப்பளித்துவிட்டார்கள். அவ்வளவு மதிப்பளித்திருக்க வேண்டிய தேவையில்லை. ஆஃப்கான் ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடியிருக்கலாம் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 
 

click me!