#ICCWTC இந்திய அணி கோலியை மட்டுமே நம்பி இல்ல; டீம் செமயா இருக்கு! டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வெற்றிவாய்ப்பு

By karthikeyan VFirst Published May 22, 2021, 8:22 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு  இருப்பதாகவும், இந்திய அணி கோலியை மட்டுமே நம்பியில்லை என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி குறித்தும் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு குறித்தும் பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், இந்திய அணி நல்ல பேலன்ஸான அணியாக உள்ளது. இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் கண்டிப்பாக நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். இந்திய பேட்டிங் ஆர்டர் அனுபவம் வாய்ந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் ஆடிய நல்ல அனுபவம் கொண்ட பேட்ஸ்மேன்கள். எனவே நியூசிலாந்து அணியின் பவுலிங் யூனிட் சிறப்பாகவே இருந்தாலும், இந்திய பேட்டிங் ஆர்டர் மீது ஆதிக்கம் செலுத்தவெல்லாம் முடியாது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடக்கும் சவுத்தாம்ப்டன் ஆடுகளம் கண்டிப்பாக ஸ்பின்னர்களுக்கு உதவியாக இருக்கும். அஷ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் அசத்துவார்கள்.  இந்திய அணி கோலியை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கோலி இல்லாமலேயே இந்திய அணி ஜெயித்தது. எனவே ஒட்டுமொத்தமாக இந்திய அணி நல்ல பேலன்ஸாக அணியாக உள்ளது என்று ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூறியுள்ளார். 
 

click me!