IPL 2021 ஷர்துல் தாகூர் செய்த மிகப்பெரிய தவறு..! அவுட்டாகி தப்பித்த ரிதிமான் சஹா

By karthikeyan VFirst Published Sep 30, 2021, 8:24 PM IST
Highlights

ஷர்துல் தாகூர் செய்த தவறால், அவுட்டாகியிருக்க வேண்டிய ரிதிமான் சஹா அதிலிருந்து தப்பித்தார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய், 7 பந்தில் வெறும் 2 ரன் மட்டுமே அடித்து ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சனும் 11 பந்தில் ட்வைன் பிராவோவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

ஒருமுனையில் 2 முக்கியமான வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்றும் அடித்தும் ஆடிவரும் ரிதிமான் சஹாவின் விக்கெட்டை, இன்னிங்ஸின் 9வது ஓவரில் ஷர்துல் தாகூர் கிட்டத்தட்ட எடுத்துவிட்டார். ஷர்துல் தாகூரின் பந்தில் ரிதிமான் சஹா கேட்ச் கொடுத்தார். ஆனால் அது நோ பால் ஆகிவிட்டது. அதனால் அவுட்டிலிருந்து தப்பிய ரிதிமான் சஹா தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார்.

ஷர்துல் தாகூர் செய்த தவறால் சஹா தொடர்ந்து பேட்டிங் ஆடிவருகிறார். சஹாவின் விக்கெட் விழுந்திருந்தால், அனுபவமற்ற சன்ரைசர்ஸின் மிடில் ஆர்டரை(ஹோல்டர் தவிர), எளிதில் வீழ்த்தியிருக்கலாம்.
 

click me!