India vs South Africa: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இந்த 11 பேரையும் இறக்குங்க! முன்னாள் வீரரின் தேர்வு

By karthikeyan VFirst Published Jan 18, 2022, 8:25 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ளார்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என தென்னாப்பிரிக்கா வென்றது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.

முதல் ஒருநாள் போட்டி நாளை(ஜனவரி 19) நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

கேஎல் ராகுலுடன் வெங்கடேஷ் ஐயரை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர். 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், 5ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.

ஸ்பின்னர்களாக ஜெயந்த் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக ஷர்துல் தாகூரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்த இந்திய ஆடும் லெவன்:

கேஎல் ராகுல் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஜெயந்த் யாதவ், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!