தோல்வியிலிருந்து மீளுமா ஆர்சிபி? லக்னோ அணியுடன் இன்று பலப்பரீட்சை!

Published : Apr 02, 2024, 11:55 AM IST
தோல்வியிலிருந்து மீளுமா ஆர்சிபி? லக்னோ அணியுடன் இன்று பலப்பரீட்சை!

சுருக்கம்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறுகிறது.

கடந்த 22 ஆம் தேதி முதல் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரையில் 14 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், 12 போட்டிகளில் ஹோம் மைதானத்தில் விளையாடிய அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் அவே அணியே வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதே போன்று நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தான் இன்று பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. ஆர்சிபி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 3 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3 போட்டிகளிலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்சமாகவும், குறைந்தபட்சமாகவும் பெங்களூரு அணி 212 ரன்கள் எடுத்துள்ளது. இதே போன்று லக்னோ அதிகபட்சமாக 213 ரன்களும், குறைந்தபட்சமாக 108 ரன்களும் எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த 2 போட்டிகளில் ஒரு போட்டியில் லக்னோ அணியும், ஒரு போட்டியில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் பெங்களூருவில் நடந்த 2 போட்டிகளில் ஒரு போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

"பாக். பேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பும்ரா-பாண்டியா! சூப்பர் 8-க்கு கெத்தாக நுழைந்தது இந்தியா!"
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!