ஆமா எனக்கும் கோலிக்கும் சண்டைதான்.. உறுதிப்படுத்திய ரோஹித் சர்மா.. வெடித்தது சர்ச்சை

By karthikeyan VFirst Published Jul 25, 2019, 2:55 PM IST
Highlights

ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல் என அண்மைக்காலமாகவே பேசப்பட்டுவருகிறது. 
 

ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல் என அண்மைக்காலமாகவே பேசப்பட்டுவருகிறது. 

சர்வதேச அளவிலும் இந்திய அணியிலும் டாப் 2 பேட்ஸ்மேன்கள் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும்தான். விராட் கோலியின் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்கள் உள்ளன. அதேநேரத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பல தருணங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

ஆசிய கோப்பையில் விராட் கோலி ஆடாத நிலையில், அந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, அணியை சிறப்பாக வழிநடத்தி ஆசிய கோப்பையை வென்றுகொடுத்தார். அதற்கு முன்னதாக நிதாஹஸ் டிராபி டி20 தொடரையும் ரோஹித் சர்மா வென்று கொடுத்தார். இவ்வாறு கேப்டனாக செயல்பட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் ரோஹித் சர்மா. 

ஆசிய கோப்பையை வென்றபிறகு அதிரடியான ஒரு பேட்டியையும் கொடுத்தார். இந்திய அணியின் முழுநேர கேப்டனாக தன்னை நியமித்தால், கேப்டனாக செயல்பட தயார் என்று அதிரடியாக பேட்டி கொடுத்தார். அப்போதே ரோஹித்தின் கேப்டன்சி ஆசையும் கோலிக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதும் தெரியவந்தது. 

உலக கோப்பை தோல்விக்கு பின்னர் மீண்டும் ரோஹித் - கோலி மோதல் குறித்த விவாதம் எழுந்தது. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித்தின் ஆலோசனையை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும், ரோஹித் - கோலியின் தலைமையில் இரண்டு கேங்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், கோலியுடனான மோதலை உறுதிப்படுத்தும் விதமாக ரோஹித் சர்மாவின் செய்கை அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே விராட் கோலியை அன்ஃபாலோ செய்திருந்த ரோஹித் சர்மா, தற்போது கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவையும் அன்ஃபாலோ செய்திருப்பதாக மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மாவின் இந்த செயல், கோலியுடனான மோதலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மாவின் இந்த செயல், பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!