India vs England: லக்னோவில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் ரோகித் சர்மா!

By Rsiva kumarFirst Published Oct 29, 2023, 12:53 PM IST
Highlights

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 29ஆவது லீக் போட்டி லக்னோவில் நடக்கும் நிலையில் அந்த மைதானத்தில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் ரோகித் சர்மா என்ற சாதனையை பெற்றிருக்கிறார்.

லக்னோவில் இன்னும் சற்று நேரத்தில் 29ஆவது லீக் போட்டி தொடங்குகிறது. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 10ஆவது இடத்தில் உள்ளது.ஒரு கேப்டனாக ரோகித் சர்மா இன்று தனது 100ஆவது போட்டியில் விளையாடுகிறார்.

India vs England: 7ஆவது இந்திய கேப்டனாக 100ஆவது போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா!

இதுவரையில் நடந்த 99 போட்டிகளில் 73 போட்டிகளில் வெற்றியும், 26 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார். மேலும், ஒரு கேப்டனாக ஒரு நாள் போட்டிகளில் 38 இன்னிங்ஸில் ரோகித் சர்மா 4 சதமும், 12 அரை சதமும் அடித்துள்ளார். லக்னோவில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். அவர் 61 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.இதுவரையில் இரு அணிகளும் 8 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 4 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

நடையை கட்டும் வங்கதேசம் – சாதனையோடு அரையிறுதி வாய்ப்புக்காக வீர நடை போடும் நெதர்லாந்து!

கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு நடந்த போட்டியானது டையில் முடிந்துள்ளது. இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே போன்று இரு அணிகளும் 106 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 57 போட்டிகளிலும் இங்கிலாந்தும், 44 போட்டிகளிலும் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

India vs England: 9ஆவது முறையாக உலகக் கோப்பையில் இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை; வெற்றி யாருக்கு?

மூன்று போட்டிகளுக்கு முடிவு இல்லை. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி நடந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பையில் 9ஆவது முறையாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது லக்னோவில் நடக்கிறது.

India vs England: பயிற்சியின் போது ரோகித் சர்மாவிற்கு காயம் – ஓடி வந்து சிகிச்சை அளித்த பிசியோ!

click me!