ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான சூர்யகுமார் யாதவ்..! 5 ஆண்டுக்கு முன் ரோஹித் சர்மா பதிவிட்ட டுவீட் செம வைரல்

By karthikeyan VFirst Published Mar 23, 2023, 9:15 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவ் ஹாட்ரிக் டக் அவுட்டான நிலையில், அவரைப்பற்றி ரோஹித் சர்மா 5 ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட டுவீட் இப்போது செம வைரலாகிவருகிறது. 
 

இந்திய அணியின் அதிரடி வீரரும், டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய மேட்ச் வின்னருமான சூர்யகுமார் யாதவ், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சமகாலத்தின் சிறந்த வீரராக பார்க்கப்படுகிறார். ஆனால் அவர் டி20 கிரிக்கெட்டில் ஜொலிக்கும் அளவிற்கு ஒருநாள் கிரிக்கெட்டில் ஜொலிக்கவில்லை.

டி20 கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் 3 சதங்களுடன் 1675 ரன்களை குவித்துள்ள சூர்யகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் 23 போட்டிகளில் ஆடி வெறும் இரண்டே அரைசதங்களுடன் 433 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 

நாடா, ஐபிஎல்லா..? முடிவெடுத்தே தீரணும்..! பிசிசிஐக்கு ரவி சாஸ்திரி கோரிக்கை

ஒருநாள் போட்டிகளில் வழக்கமாக 4ம் வரிசையில் ஆடும் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடாததால் இந்த தொடரில் 4ம் வரிசையில் இறங்க வாய்ப்பு பெற்றார் சூர்யகுமார் யாதவ். ஆனால் யாருமே எதிர்பார்த்திராத விதமாக 3 போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி விரும்பத்தகாத பட்டியலிலும் இணைந்தார்.

சூர்யகுமார் யாதவ் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ள இந்த வேளையில், அவர் இதேபோன்று மோசமான ஃபார்மில் ஐபிஎல்லில் சொதப்பியபோது, 2018ல் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் சர்மா பதிவிட்ட டுவீட் இப்போது வைரலாகிவருகிறது.

சூர்யகுமார் யாதவின் திறமை மீது எப்போதுமே அதீத நம்பிக்கை வைத்திருப்பவர் ரோஹித் சர்மா. சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில்  சதங்களை விளாசியபோது, அவர் பெரிய வீரராக வருவார் என்று ரோஹித் சர்மா முன்பே கணித்த டுவீட் வைரலாகிவந்தது.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் இப்போது சொதப்பிவரும் நிலையில், இதேபோன்றதொரு முந்தைய நெருக்கடியான சூழலில் அவருக்கு ஆதரவாக ரோஹித் சர்மா பதிவிட்ட டுவீட், இப்போது அவர் இருக்கும் சூழலுக்கும் நெருக்கடிக்கும் அவருக்கு ஆதரவாக அமையும் விதமாக அமைந்துள்ளது. அது வைரலாகிவருகிறது.

நீங்க சீனியர்.. எனக்கு கீழ் பணிபுரிவது நல்லா இருக்காது! சீனியர் ஸ்பின்னரின் சேவையை ஏற்க மறுத்த ராகுல் டிராவிட்

2018ல் இதேபோன்று சூர்யகுமார் திணறிய சமயத்தில், சூரியன் மீண்டும் நாளை உதிக்கும் என்று ரோஹித் சர்மா பதிவிட்டிருந்த டுவீட் தான் இப்போது வைரலாகிவருகிறது. அதாவது சூர்யகுமார் யாதவ் மீண்டும் அசாத்திய இன்னிங்ஸ் ஆடி அசத்துவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமான டுவீட் தான் அது.

click me!