சங்கக்கரா, தோனி கூட செய்யாத சாதனையை செய்த ரிஷப் பண்ட்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த பண்ட்

By karthikeyan VFirst Published Jan 13, 2022, 9:52 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட்டில் சதமடித்த ரிஷப் பண்ட், அபாரமான சாதனை படைத்துள்ளார்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 223 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் அடித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட்டின் பொறுப்பான சதத்தால் (100*) 198 ரன்கள் அடித்த இந்திய அணி, 211 ரன்கள் முன்னிலை பெற்று, 212 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்க அணி அந்த இலக்கை விரட்டிவருகிறது.

இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் அடித்த சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் ரிஷப் பண்ட். 

இந்த சதத்தின் மூலம் ரிஷப் பண்ட் படைத்த சாதனைகள்:

1. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளிலும் சதமடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான்.

2. தென்னாப்பிரிக்காவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.

3.  SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் அதிக சதமடித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் (3 சதங்கள்) படைத்துள்ளார். 

4. தென்னாப்பிரிக்காவில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.

இப்படியாக, மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களான குமார் சங்கக்கரா, தோனி ஆகிய வீரர்கள் கூட செய்யாத சாதனையை ஒரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக செய்துள்ளார் ரிஷப் பண்ட்.
 

click me!