India vs West Indies: முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய கேஎல் ராகுல்.. இதுதான் காரணம்

Published : Feb 03, 2022, 07:11 PM IST
India vs West Indies: முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய கேஎல் ராகுல்.. இதுதான் காரணம்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் ஆடாததற்கான காரணத்தை பார்ப்போம்.  

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. வரும் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் அகமதாதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்லும், வரும் 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனிலும் நடக்கவுள்ளன. 

இரு அணிகளும் இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நவ்தீப் சைனி(ஸ்டாண்ட் பை வீரர்) ஆகிய நால்வருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இவர்கள் மூவரும் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கேஎல் ராகுலும் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் கொரோனாவால் ஆடமுடியாத நிலையில், கேஎல் ராகுலும் முதல் போட்டியிலிருந்து விலகியதால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேஎல் ராகுல் ஏன் முதல் ஒருநாள் போட்டியில் ஆடவில்லை என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அவரது தங்கையின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக முதல் ஒருநாள் போட்டியிலிருந்து ராகுல் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தை முடித்துவிட்டு, 9ம் தேதி நடக்கும் 2வது ஒருநாள் போட்டிக்கு வந்துவிடுவார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!