ஐபிஎல்லில் இருந்து விலகிய இங்கி., வீரருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க இளம் வீரரை தட்டி தூக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்

By karthikeyan VFirst Published May 2, 2021, 1:57 PM IST
Highlights

ஐபிஎல்லில் இருந்து விலகிய இங்கி., வீரருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க இளம் வீரரை தட்டி தூக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்
 

ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் லிவிங்ஸ்டோனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜெரால்டு கோயட்ஸீயை ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் அணி.

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் இல்லாமல் சற்று தடுமாறுகிறது. முதல் 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடமான 7ம் இடத்தில் உள்ளது.

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெளிநாட்டு நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகிய நிலையில், இங்கி., வீரர் லிவிங்ஸ்டோன் மற்றும் ஆஸி., வீரர் ஆண்ட்ரூ டை ஆகியோரும் வெளியேறினர்.

அதனால் பட்லர், மில்லர், மோரிஸ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே அணியில் பெற்றிருந்த ராஜஸ்தான் அணி, தென்னாப்பிரிக்க வீரர் வாண்டெர்டசனை அணியில் எடுத்தது. இதையடுத்து இந்தியா வந்த அவர், குவாரண்டினில் உள்ளார். அதனால் கடந்த போட்டியில் ஆடாத அவர், இன்றைய போட்டியிலும் ஆடமாட்டார்.

இந்நிலையில், ஐபிஎல்லில் இருந்து விலகிய லிவிங்ஸ்டோனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 20 வயதே ஆன இளம் ஃபாஸ்ட் பவுலரான ஜெரால்டு கோயட்ஸீயை ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் அணி. 2 அண்டர் 19 உலக கோப்பைகளில் ஆடியுள்ள ஜெரால்டு, 8 டி20 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!