அந்த 2 டீமையும் தோற்கடிச்சுட்டா கோப்பை நமக்குத்தான்.. அடித்து சொல்லும் ரெய்னா

By karthikeyan VFirst Published Jun 2, 2019, 12:57 PM IST
Highlights

சுரேஷ் ரெய்னா 2 அணிகளின் பெயரை குறிப்பிட்டு, அந்த அணிகளை வீழ்த்திவிட்டால் இந்திய அணி கோப்பையை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த உலக கோப்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாகவே உள்ளன. ஸ்மித் மற்றும் வார்னர் வருகைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எழுச்சி கண்டுள்ளது. நியூசிலாந்து அணியும் அபாரமாக ஆடிவருகிறது. வில்லியம்சன், ரோஸ் டெய்லர் ஆகியோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர். நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம், சாண்ட்னெர் ஆகிய ஆல்ரவுண்டர்களும் அபாரமாக ஆடுகின்றனர். தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா, இங்கிடி, ஸ்டெய்ன் என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் அபாரமாக உள்ளது. 

இந்தியா, இங்கிலாந்து அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாக கருதப்பட்டாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணியும் அபாரமாக ஆடிவருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் அபாரமாக உள்ளது. பேட்டிங்கில் டெப்த்தும் உள்ளது. 8ம் வரிசை வரை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். கெய்ல், ஹோப், ஹெட்மயர், டேரன் பிராவோ, பூரான் என நல்ல பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. பவுலிங்கில் ஒஷேன் தாமஸ் அசத்துகிறார். 

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கூட அந்த அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக இருக்கின்றன.

இந்நிலையில், உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளையும் வீழ்த்திவிட்டால் இந்திய அணி கோப்பையை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது. இங்கிலாந்து அணி நல்ல பலமாக உள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சரின் வருகைக்கு பிறகு கூடுதல் வலுவுடன் திகழ்கிறது. இந்தியாவும் இங்கிலாந்தும்தான் இறுதி போட்டியில் மோதும் வாய்ப்புள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் சிறப்பாக உள்ளது. அவர்களை கணிக்கவே முடியாது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிறைய கேம் சேஞ்சர்கள் உள்ளனர் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். 
 

click me!