இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் ஆகிறார் ராகுல் டிராவிட்..! டிராவிட்டுடன் டீலை முடித்த பிசிசிஐ

By karthikeyan VFirst Published Oct 16, 2021, 2:51 PM IST
Highlights

ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ராகுல் டிராவிட் ஒப்புக்கொண்டதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைகிறது. கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி, 4 ஆண்டுகள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த நிலையில், அவரது பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிகிறது.

இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆடிக்கொண்டிருந்த அதே சமயத்தில் இலங்கையில் இந்திய அணி ஆடிய கிரிக்கெட் தொடருக்கு, முன்னாள் கேப்டனும் லெஜண்ட் கிரிக்கெட்டருமான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்டார். 

எனவே ரவி சாஸ்திரிக்கு பிறகு ராகுல் டிராவிட் தான் இந்திய அணியின் பயிற்சியாளர் என்று கருதப்பட்ட நிலையில், அவர் தனிப்பட்ட  காரணங்களுக்காக, அந்த பொறுப்பை ஏற்க தயாராக இல்லை என்று தகவல் வெளியாகியிருந்தது. 

இதையடுத்து, டி20 உலக கோப்பைக்கு பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் செய்யும் சுற்றுப்பயணத்திற்கு மட்டும் ராகுல் டிராவிட் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரே, தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட விரும்பிய பிசிசிஐ, இதுதொடர்பாக ராகுல் டிராவிட்டிடம் பேசி அவரது ஒப்புதலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி முடிவை இப்பவே சொல்லும் அஃப்ரிடி

2023ம் ஆண்டுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் ஒப்புகொண்டிருப்பதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய அணிக்கு மிக மகிழ்ச்சியான மற்றும் சிறப்பான செய்தியாகும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!