#IPL2021Auction ரூ.5.25 கோடிக்கு ஏலம்போன தமிழ்நாடு வீரர் ஷாருக்கான்..! பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஃபினிஷர்

By karthikeyan VFirst Published Feb 18, 2021, 5:39 PM IST
Highlights

தமிழ்நாடு வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. 
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் நடந்துவருகிறது. அணியின் பெயரை பஞ்சாப் கிங்ஸ் என்று மாற்றுக்கொண்டு, தெளிவான  ஐடியாக்களுடன் ஏலத்திற்கு வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, சிறப்பான வீரர்களை தேர்வு செய்துவருகிறது.

இங்கிலாந்து அணியின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும், ஐசிசி டி20 தரவரிசையின் நம்பர் பேட்ஸ்மேனுமான டேவிட் மாலை ரூ.1.5 கோடி என்ற அவரது அடிப்படை விலைக்கு எடுத்த பஞ்சாப் அணி, ஷமிக்கு ஃபாஸ்ட் பவுலிங் பார்ட்னராக ஆஸி., வீரர் ஜெய் ரிச்சர்ட்ஸனை ரூ.14 கோடிக்கு எடுத்தது.

தமிழ்நாட்டை சேர்ந்த அதிரடி ஃபினிஷரான ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், கெய்ல் என டாப் ஆர்டர் வலுவாகவுள்ள பஞ்சாப் அணிக்கு பூரானை தவிர மிடில் ஆர்டரில் தரமான அதிரடி வீரர் இல்லை. அந்தவகையில், ஷாருக்கான் பஞ்சாப் அணியின் அந்த குறையை தீர்ப்பார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர் என உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்து, தமிழ்நாடு அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார் ஷாருக்கான்.

கடந்த ஐபிஎல் சீசனிலேயே ஏலத்தில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கான், கடந்த ஏலத்தில் விலைபோகாத நிலையில், தனது தொடர்ச்சியான கடும் உழைப்பு மற்றும் சிறப்பான பேட்டிங்கால் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
 

click me!