#IPL2021 அவருக்கு ஏற்ற டீம் ஆர்சிபி தான்..! தரமான செலக்‌ஷன்

By karthikeyan VFirst Published Apr 19, 2021, 4:15 PM IST
Highlights

க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு ஏற்ற அணி ஆர்சிபி தான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

இதுவரை ஒருமுறை கூடாத ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய நிலையில், இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

இந்த சீசனின் முதல் 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆர்சிபி அணியின் வெற்றிகளுக்கு, இந்த சீசனில் அந்த அணியில் இணைந்த மேக்ஸ்வெல் தான் முக்கிய காரணம். 3 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 176 ரன்களை குவித்துள்ளார்.

ஐபிஎல்லில் 2014ம் ஆண்டு சீசனுக்கு பிறகு சரியாக ஆடாத மேக்ஸ்வெல், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக படுமோசமாக ஆடினார். சீசன் முழுக்க ஆடி வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், இனி வேலைக்கு ஆகமாட்டார் என்று பஞ்சாப் அணி அவரை கழட்டிவிட்டது. ஐபிஎல்லில் சொதப்பினாலும், ஆஸ்திரேலிய அணிக்காக அபாரமாக ஆடிவரும் மேக்ஸ்வெல்லின் மீது நம்பிக்கை வைத்து அவரை ரூ.14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்சிபி அணி.

ஆர்சிபி அணி தன் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல், அபாரமாக ஆடி அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்துவருகிறார் மேக்ஸ்வெல்.

இந்நிலையில், ஆர்சிபி தான் மேக்ஸ்வெல்லுக்கு ஏற்ற அணி என்று மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வான், மேக்ஸ்வெல் மிகச்சிறந்த கிரிக்கெட்டர். மொயின் அலிக்கு சிஎஸ்கே தான் சரியான அணி என்று சொன்னோம். அதேபோலவே, க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு ஆர்சிபி தான் சரியான அணி. மற்ற அணிகளில் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் ஆர்சிபியில் கோலி, டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் வீரர்களுக்கு அடுத்துத்தான் மேக்ஸ்வெல். இது அவர் மீதான அழுத்தத்தை குறைக்கிறது. அதனால் அவரால் சிறப்பாகவும் செயல்பட முடிகிறது. எனவே ஆர்சிபி தான் மேக்ஸ்வெல்லுக்கு ஏற்ற அணி என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

click me!