WPL 2024, DCW vs RCBW: ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு – வெற்றி யாருக்கு? ஆர்சிபி – டெல்லி: யார் அந்த சாம்பியன்?

Published : Mar 17, 2024, 07:38 PM IST
WPL 2024, DCW vs RCBW: ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு – வெற்றி யாருக்கு? ஆர்சிபி – டெல்லி: யார் அந்த சாம்பியன்?

சுருக்கம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் இடம் பெற்ற 6 அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதில், தற்போது நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. மேலும், முதல் சீசனில் இறுதிப் போட்டியில் இடம் பெற்ற வீராங்கனைகள் அனைவரும் இந்த சீசனிலும் இறுதிப் போட்டியிலும் இடம் பெற்றுள்ளனர்.

இதே போன்று தான் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனிலும் டெல்லி கேபிடல்ஸ் இறுதிப் போட்டிக்கு வந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கும் தேர்வு செய்தது. இதில் டெல்லி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியானது 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் சீசனிலே டிராபியை கைப்பற்றியது.

ஆனால், 2ஆவது சீசனில் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. இதன் காரணமாக ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட ஆர்சிபி முன்னேறவில்லை. 8 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2ஆவது அணியாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்த சீசனில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று நீயா நானா ரேஸில் மும்பையை வீழ்த்தி கம்பீர தோரணையோடு இறுதிப் போட்டிக்கு வந்தது.

தற்போது நடைபெறும் இறுதிப் போட்டியில் முதல் சீசனிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட டெல்லி இந்த சீசனில் டிராபியை தட்டி தூக்குமா? அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டிராபியை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். டாஸ் மற்றும் டெல்லி வீராங்கனைகள் அப்படியே முதல் சீசனைப் போன்று நடப்பதால் இந்த சீசன் ஆர்சிபிக்கு சாதகமாக இருக்குமா என்பதை பார்ப்போம்….

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கிரிக்கெட் வாரியம்.. இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்? புது தகவல்!
2026 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! ஐசிசி-யை வறுத்தெடுத்த அஸ்வின்!