அன்பிற்கு விலை மதிப்பே இல்ல – மகனின் முதல் வெற்றிக்கு கட்டிப்பிடித்து முத்தமிட்ட தந்தை – வைரல் வீடியோ!

Published : Mar 25, 2024, 12:38 PM IST
அன்பிற்கு விலை மதிப்பே இல்ல – மகனின் முதல் வெற்றிக்கு கட்டிப்பிடித்து முத்தமிட்ட தந்தை – வைரல் வீடியோ!

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு கேப்டனாக தனது மகன் முதல் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து சுப்மன் கில்லின் தந்தை முத்தமிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். நேற்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 5ஆவது போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கேப்டன் மாற்றம் – இரண்டாக உடைந்த MI Team, ஹர்திக், ரோகித் ரசிகர்கள் மோதல்!

 

 

பின்னர் 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் விளையாடியது. இதில் ரோகித் சர்மா மற்றும் டிவேல்டு பிரேவிஸ் இருவரும் 40 ரன்களுக்கு மேல் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த ஹர்திக் பாண்டியா கூட 1, 6, 4 என்று ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 162 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Rohit Sharma Video: மும்பை தோற்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ரசிகர்கள் – எக்ஸ் பக்கத்தை தெறிக்கவிட்ட மீம்ஸ்!

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து 12 ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் தான் இந்தப் போட்டிக்கு பிறகு சுப்மன் கில்லின் கேப்டன்ஷியை சீனியர் கிரிக்கெட் வீரர்கள் முதல் கிரிக்கெட் விமர்சகர்கள், வர்ணனையாளர்கள் என்று பலரும் பாராட்டு தெரிவித்தனர். அவர்களையும் தாண்டி சுப்மன் கில்லின் தந்தை தனது மகனின் வெற்றிக்கு அவருக்கு முத்தமிட்ட காட்சி காண்போரை வியக்க வைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீல்டிங்கில் அங்கும், இங்கும் ஓட வைத்த பாண்டியா – விரக்தியோடு பேசிய ரோகித் சர்மா – வைரல் வீடியோ!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!