எங்களுக்கு வேற வழியே இல்ல.. அந்த ஒரு ஓவர் குறித்து கேஎல் ராகுல் அதிரடி

By karthikeyan VFirst Published Apr 30, 2019, 2:52 PM IST
Highlights

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி அபாரமாக பேட்டிங் ஆடியது. வார்னரும் சஹாவும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பின்னர் வில்லியம்சனும் முகமது நபியும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. 

எஞ்சிய 2 இடத்திற்கான போட்டி கடுமையாக உள்ள நிலையில், நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 212 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, பஞ்சாப் அணியை 167 ரன்களில் சுருட்டி 45 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி அபாரமாக பேட்டிங் ஆடியது. வார்னரும் சஹாவும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பின்னர் வில்லியம்சனும் முகமது நபியும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 

பஞ்சாப் அணியின் நட்சத்திர பவுலரான முஜீபுர் ரஹ்மானின் பவுலிங்கை சன்ரைசர்ஸ் வீரர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர். 4 ஓவர்கள் வீசி 66 ரன்களை விட்டுக்கொடுத்தார் முஜீபுர். 4வது ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்த முஜீபுர் ரஹ்மானின் 18வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் உட்பட 26 ரன்கள் எடுக்கப்பட்டது. 

ஏற்கனவே 3 ஓவர்கள் வீசி 40 ரன்களை வாரி வழங்கியிருந்த முஜீபுர் ரஹ்மானுக்கு 4வது ஓவர் வழங்கப்பட்டது சரிதானா என்ற கேள்வி போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுலிடம் எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ராகுல், நாங்கள் சரியாக 5 பவுலர்களுடன் களமிறங்கினோம். எனவே முஜீபுர் ரஹ்மானின் கடைசி ஓவரை அவர் தான் வீசியாக வேண்டும். எங்களுக்கு வேறு யாரையும் மாற்றி பந்துவீச வைப்பதற்கு ஆப்சன் இல்லை. சில வீரர்களுக்கு காயம் என்பதால் 6 பவுலருடனோ அல்லது ஆல்ரவுண்டருடனோ எங்களால் களமிறங்க முடியவில்லை. அப்படியிருக்கையில், 5 பவுலர்களும் அவர்களின் கோட்டாவை வீசியே ஆக வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இளம் பவுலரான முஜீபுர் ரஹ்மான் இதுவரை நன்றாகவே வீசியுள்ளார். இந்த போட்டியில் தான் அதிக ரன்களை வழங்கிவிட்டார் என்று ராகுல் தெரிவித்துள்ளார். 
 

click me!