மழையால் மாறி போன போட்டி – 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!

Published : Apr 27, 2025, 01:04 AM IST
மழையால் மாறி போன போட்டி – 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி!

சுருக்கம்

KKR vs PBKS Match Results: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்: ஐபிஎல் 2025ன் 44வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டன.

KKR vs PBKS Match Results: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025ன் 44வது போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா சிறப்பாக ஆடினர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் அணியைப் பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். பதிலுக்கு ஆடிய கேகேஆர் அணி அதிக நேரம் பேட்டிங் செய்யவில்லை, மழை குறுக்கிட்டது.

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். பிரப்சிம்ரன் சிங் (83 ரன்கள், 49 பந்துகள், 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (69 ரன்கள், 35 பந்துகள், 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தனர். ஐயர் 25 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் 201 ரன்கள் எடுத்தது. வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியவுடன் மழை

202 ரன்கள் இலக்கைத் துரத்திய கேகேஆர் அணியில் சுனில் நரைன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் போட்டி நிறுத்தப்பட்டது. மழை விடாமல் பெய்த நிலையில் போட்டி நேரம் முடிந்த பின்னர் போட்டி ரத்து செய்யப்பட்டது.

கேகேஆருக்குப் பிளேஆஃப் வாய்ப்பு கடினம்

போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளிகள் பெற்றன. இதன் மூலமாக பஞ்சப் கிங்ஸ் அணி 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்தது. ஆனால், கேகேஆர் 7வது இடத்தில் உள்ளது. கேகேஆருக்குப் பிளேஆஃப் வாய்ப்பு கடினமாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3ஆவது முறையாக டிராபி வென்றது. ஆனால், இந்த சீசனில் அதற்கு வாய்ப்புகள் இல்லை.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?