
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷஷான்க் சிங், ஜெகதீசா சுஜித், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.
கேகேஆர் அணி:
வெங்கடேஷ் ஐயர், ஆரோன் ஃபின்ச், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், ஷெல்டான் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், அமான் ஹக்கீம் கான், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச்(7) மற்றும் வெங்கடேஷ் ஐயர்(6) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்க, 4ம் வரிசையில் களமிறங்கிய சுனில் நரைன் 6 ரன்னுக்கு நடையை கட்டினார். சிறப்பாக ஆடிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்னிலும், ஷெல்டான் ஜாக்சன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அருமையாக பந்துவீசி வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரையும் வீழ்த்தியிருந்த நிலையில், அரைசதம் அடித்த நிதிஷ் ராணாவை 54 ரன்னுக்கு வெளியேற்றினார். அதன்பின்னர் டெத் ஓவரில் அடித்து ஆடிய ஆண்ட்ரே ரசல் 25 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவரில் 175 ரன்களை குவித்துள்ள கேகேஆர் அணி, 176 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.