விஜய் சங்கர்லாம் வேலைக்கு ஆகமாட்டாரு - உலக கோப்பையை வென்ற அணியின் முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published May 14, 2019, 3:41 PM IST
Highlights

நடப்பு ஃபார்மின் அடிப்படையிலும் விஜய் சங்கர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால், தேவைப்படும்போது பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் அவரை உலக கோப்பை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக யார் அறிவிக்கப்படுவார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அப்படியிருக்கையில் உலக கோப்பை அணியின் நான்காம் வரிசை வீரராக பார்க்கப்பட்ட ராயுடு, அண்மைக்காலமாக சொதப்பியதால் அவரை நீக்கிவிட்டு அதிரடியாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். 

நடப்பு ஃபார்மின் அடிப்படையிலும் விஜய் சங்கர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால், தேவைப்படும்போது பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கமளித்திருந்தார். நான்காம் வரிசையில் விஜய் சங்கரையோ கேஎல் ராகுலையோ இறக்கலாம் என்ற வகையில் அணி தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 

விஜய் சங்கர் மிடில் ஓவர்களில் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து சிங்கிள் ரோடேட் செய்வதுடன் அவ்வப்போது பெரிய ஷாட்டுகளை அடித்தும் ஆடுகிறார். எனவே விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலும் அணியில் இருப்பதால் அவரை இறக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.

உலக கோப்பையே தொடங்க உள்ள நிலையில், பல முன்னாள் வீரர்கள் இன்னும் நான்காம் வரிசை வீரர் குறித்த கருத்தை தெரிவித்துவருகின்றனர். எந்த வரிசையையும் இன்னாருக்குத்தான் என்று ஒதுக்காமல் சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்க வேண்டும் என்று கபில் தேவ், சந்தீப் பாட்டீல் ஆகியோர் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், கபில் தேவ், சந்தீப் பாட்டீலுடன் 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடிய சையத் கிர்மானி, தனது கருத்தை தெரிவித்துள்ளார். கேதர் ஜாதவ் தான் நான்காம் வரிசையில் ஆட வேண்டும். ஐபிஎல்லில் அவர் காயமடைந்துள்ளதால், ஒருவேளை உலக கோப்பையில் அவர் ஆடமுடியாவிட்டால், நான்காம் வரிசைக்கு விஜய் சங்கரை விட ராயுடுதான் சரியான தேர்வாக இருப்பார் என்று கிர்மானி தெரிவித்துள்ளார். 
 

click me!