மனசாட்சியே இல்லாமல் அடிச்ச ஜோஷ் இங்கிலிஸ் – 47 பந்துகளில் 102 ரன்கள், முதல் முறையாக சதம் அடித்து சாதனை!

Published : Nov 23, 2023, 08:39 PM IST
மனசாட்சியே இல்லாமல் அடிச்ச ஜோஷ் இங்கிலிஸ் – 47 பந்துகளில் 102 ரன்கள், முதல் முறையாக சதம் அடித்து சாதனை!

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி தனது முதல் சர்வதேச சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.

உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதையடுத்து, டி20 போட்டியிலாவது அதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியா எந்த இடத்தில் விட்டதோ அந்த இடத்திலிருந்து அந்த அணியின் ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியை தொடங்கி சதம் விளாசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் 13ஆவது டி20 போட்டி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில், ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக இருந்த ஜோஷ் இங்கிலிஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அவர், 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 18 பந்துகளில் 49 ரன்கள் குவித்து 47 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார். அதோடு, அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

கடைசியாக 50 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இதில், அவர் 8 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடித்துள்ளார். ஆனால், உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!