#IPL2021 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செம குட் நியூஸ்

By karthikeyan VFirst Published Mar 31, 2021, 10:14 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் 14வது சீசனின் ஐந்தாவது போட்டியிலிருந்து ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை கழட்டிவிட்டு, இந்த சீசனில் சஞ்சு சாம்சனின் கேப்டன்சியில் களமிறங்கவுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர மற்றும் முதன்மை ஃபாஸ்ட் பவுலராக ஆர்ச்சர் திகழ்கிறார். அந்த அணியின் வெற்றிக்கு பவுலிங்கை பொறுத்தமட்டில் ஆர்ச்சரையே அதிகமாக சார்ந்துள்ளது. ஆர்ச்சருக்கு உறுதுணையாக 2வது பவுலர் தான் எவராக இருந்தாலும் என்ற நிலை அந்த அணியில் உள்ளது.

அந்தவகையில் தான், ரூ.16.25 கோடிக்கு கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. அந்தளவிற்கு ஆர்ச்சரை சார்ந்திருக்கிறது ராஜஸ்தான் அணி. இந்நிலையில், முழங்கை காயத்தால் ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதி தொடரில் ஆர்ச்சர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முழங்கை காயத்தால் அவதிப்பட்டுவந்த ஆர்ச்சர், இந்தியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகளிலும் ஆடினார். அதனால் அவரது காயம் பெரிதானது. அதன் விளைவாக, அவர் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. அந்த முழங்கை காயத்திலிருந்து மீள்வதற்கு இடையே, மீன் தொட்டியை சுத்தம்செய்தபோது கைவிரலில் காயம் ஏற்பட்டது. அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுவிட்டது.

முழங்கை காயமும் விரைவில் சரியாகிவிடும் என்பதால், ஐபிஎல் 14வது சீசனில் முதல் 4 போட்டிகளில் மட்டும் ஆடமாட்டார் என்றும், 5வது போட்டியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நற்செய்தி.
 

click me!