சிக்ஸ் பேக் உடலுடன் பீச் வாலிபால் விளையாடிய கோலி, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா!

Published : Jun 17, 2024, 06:21 PM IST
சிக்ஸ் பேக் உடலுடன் பீச் வாலிபால் விளையாடிய கோலி, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா!

சுருக்கம்

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸீல் பீச் வாலிபால் விளையாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய 8 அணிகள் முன்னேறியுள்ளன. குரூப் சுற்று போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற்ற நிலையில், சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது.

இதற்காக இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டுச் சென்றனர். அங்கு, பார்படாஸில் உள்ள பீச்சில் இந்திய அணி வீரர்கள் பீச் வாலிபால் விளையாடி உள்ளனர். இதில், விராட் கோலி, அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில், ரிங்கு சிங் ஃபிட்னஸ் மற்றும் 6 பேக் உடன் இருக்கும் புகைப்படங்கள் இடம் பெற்று வைரலாகி வருகிறது. மற்றொரு புறம் விராட் கோலியும் சிக்ஸ் பேக் உடலுடன் காணப்படுகிறார். இதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்த போது இதே போன்று பீச் வாலிபால் விளையாடி இருந்தனர்.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி வரும் 20 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. ஆண்டிகுவாவில் நடைபெறும் 2ஆவது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. கடைசியாக செயிண்ட் லூசியாவில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றான. இந்த 3 போட்டிகளில் இந்திய அணி 2ல் வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!