தீபாவளி பரிசு – 10,000 வாலா பட்டாசை கொளுத்தி போட்ட ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் – இந்தியா 410 ரன்கள் குவிப்பு!

Published : Nov 12, 2023, 06:36 PM IST
தீபாவளி பரிசு – 10,000 வாலா பட்டாசை கொளுத்தி போட்ட ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் – இந்தியா 410 ரன்கள் குவிப்பு!

சுருக்கம்

நெதர்லாந்துக்கு எதிராக உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 4 வி

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் கடைசி மற்றும் 45ஆவது லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.

IND vs NED: 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் டாப் 5 பிளேயர்ஸ் அரைசதம் அடித்து சாதனை!

சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மாவும் 44 பந்துகளில் ஒரு நாள் போட்டிகளில் 55ஆவது அரைசதம் அடித்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் தங்களது பங்கிற்கு மாறி மாறி அரைசதம் அடித்தனர். விராட் கோலி, 53 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

போதும் நீங்க விளையாடி கிழிச்சது – ஓரங்கப்பட்டப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்!

அதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயருடன், கேஎல் ராகுல் களமிறங்கினார். இருவரும் பொறுமையாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் ஷ்ரேயாஸ் ஐயர் 47 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக 48 ஆண்டுகால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் டாப் 4 வீரர்கள் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.

India vs Netherlands: 30 பந்துகளில் 50 ரன்கள் – சுப்மன் கில்லிற்கு பாராட்டு தெரிவித்த விராட் கோலி!

இதே போன்று கேஎல் ராகுலும் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் ஷ்ரேயாஸ் மற்றும் ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி கடைசி 10 ஓவர்களில் மட்டும் 126 ரன்கள் குவித்துள்ளனர். கடைசியாக, ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் உலகக் கோப்பை சதத்தை பதிவு செய்தார். ஷ்ரேயாஸ் 84 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இதே போன்று அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். அவர் 62 பந்துகளில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து சதத்தை பதிவு செய்தார். இந்த உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கடைசியாக அவர் 64 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 94 பந்துகளில் 10 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உள்பட 128 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

IND vs NED: சர்வதேச கிரிக்கெட்டில் ஓபனராக 14,000 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை!

கடைசியாக இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலமாக இந்தியா உலகக் கோப்பையில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு பெர்முடா அணிக்கு எதிராக 5 விக்கெட் இழப்பிற்கு 413 ரன்கள் குவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

India vs Netherlands: சரவெடியாய் வெடிக்குமா ரோகித் சர்மா அண்ட் கோ? டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஷஸ் 3வது டெஸ்ட்.. சரிந்த விக்கெட்டுகள்! சரித்திரம் படைத்த அலெக்ஸ் கேரி! ஆஸி.யை மீட்ட ஒற்றை நாயகன்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி