ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கெத்தாக வந்த ஹரியான ஸ்டீலர்ஸ்!

Published : Feb 29, 2024, 09:47 AM IST
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கெத்தாக வந்த ஹரியான ஸ்டீலர்ஸ்!

சுருக்கம்

புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், புனேரி பல்தான் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியிலும், ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் 2ஆவது அரையிறுதிப் போட்டியிலும் விளையாடி வருகின்றன.

இதில், ஹைதராபாத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் 3 முறையில் சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் மோதின. இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய புனேரி பல்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து புள்ளிகள் பெற்று அணியை முன்னிலை படுத்தினர். அஷ்லாம் முஷ்தாபா, அபினேஷ் நடராஜன், சங்கத் சவாத், மோகித் கயாத், பங்கஜ் மோகித் ஆகியோர் புனேரி பல்தான் அணிக்கு புள்ளிகள் பெற்றுக் கொடுத்தனர். இறுதியாக புனேரி பல்தான் 37 புள்ளிகள் பெற்றது.

இதே போன்று சச்சின், பாபு, மஞ்சீத், சுதாகர், சப்ஸ்டிடியூட் வீரர் சந்தீப் குமார் ஆகியோர் அடுத்தடுத்து புள்ளிகள் பெற்றனர். இறுதியாக பாட்னா பைரேட்ஸ் அணி 21 புள்ளிகள் மட்டுமே பெற்றது. இதன் மூலமாக 16 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பல்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து நடந்த 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில், 4 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜெய்ப்பூர் விளையாடிய 22 போட்டிகளில் 16ல் வெற்றி பெற்று நேரடியாக அரையிறுதிக்கு வந்தது. ஆனால், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியானது 22 போட்டிகளில் 13 வெற்றி உள்பட 70 புள்ளிகளுடன் 5ஆவது இடம் பிடித்திருந்தது. எலிமினேட்டர் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸை அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு வந்தது. இதில், ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நாளை மார்ச் 1 ஆம் தேதி புனேரி பல்தான் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!