#INDvsENG பிங்க் பந்து டெஸ்ட்டில் இந்திய அணியில் அதிரடி மன்னன்..! குஷியில் ரசிகர்கள்

By karthikeyan VFirst Published Feb 16, 2021, 10:59 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆடவுள்ளார் என்று தெரிகிறது.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடந்தன. முதல் போட்டியில் இங்கிலாந்தும் 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது.

வரும் 24ம் தேதி அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டிக்காக, 2வது டெஸ்ட் முடிந்த அன்றே இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா மற்றும் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் பிங்க் பந்தில் பேட்டிங் பயிற்சி செய்தனர். புஜாராவும் ஹர்திக் பாண்டியாவும் ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் ஷபாஸ் நதீம் ஆகிய ஸ்பின்னர்களை எதிர்கொண்டு ஆடினர். புஜாரா தடுப்பாட்டம் ஆட, பாண்டியா சில தடுப்பாட்டத்திற்கு பிறகு பெரிய ஷாட்டுகளை பறக்கவிட்டார்.

கடந்த 2 ஆண்டுகளாகவே காயத்தால் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடாத ஹர்திக் பாண்டியா, 2018ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய டெஸ்ட் தொடர் தான் கடைசி. அதன்பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாண்டியா ஆடாத நிலையில், அடுத்த போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

click me!