டி20 உலகக் கோப்பையில் அரைசதம் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றி ஹர்திக் பாண்டியா அண்ட் விராட் கோலி சாதனை!

Published : Jun 23, 2024, 03:27 PM IST
டி20 உலகக் கோப்பையில் அரைசதம் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றி ஹர்திக் பாண்டியா அண்ட் விராட் கோலி சாதனை!

சுருக்கம்

இந்திய வீரர்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவர் மட்டுமே டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு அரைசதம் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதுவரையில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 23, விராட் கோலி 37, ரிஷப் பண்ட் 36, ஷிவம் துபே 34 ரன்கள் எடுத்தனர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா 196 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய வங்கதேச அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்ததோடு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். இதன் மூலமாக டி20 உலகக் கோப்பை தொடரில் அரைசதம் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு விக்கெட் கைப்பற்றி அரைசதம் அடித்த இந்திய வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக டி20 உலகக் கோப்பை தொடரில் அரைசதம் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களாக விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சாதனை படைத்துள்ளனர்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை.. ஹசரங்கா, தீக்‌ஷனா சுழல் வலையில் சிக்கிய அயர்லாந்து.. இலங்கை அணி வெற்றி!
வைபவ் சூர்யவன்ஷி அடுத்த U19 உலகக்கோப்பையில் ஆட முடியாது.. ஷாக் கொடுத்த பிசிசிஐ.. ஏன்?