GT vs CSK: ஒரே ஓவரில் 28 ரன் நொறுக்கிய 17 வயது சிஎஸ்கே வீரர்! மிரண்டு போன பவுலர்!

Published : May 25, 2025, 04:54 PM IST
Ayush Mhatre csk

சுருக்கம்

17 வயது சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசினார். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

CSK Ayush Mhatre Smashed 28 runs in a single over: ஐபிஎல் 2025 தொடரின் 67வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய 17 வயது ஆயுஷ் மாத்ரே அதிரடியான தொடக்கத்தை அளித்தார். முதல் பந்திலிருந்தே அவர் அதிரடியாக விளையாடி குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்.

ஒரே ஓவரில் 28 ரன் விளாசிய ஆயுஷ் மாத்ரே

இரண்டாவது ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கான் பந்து வீச வந்தார். அவரை எதிர்கொண்ட ஆயுஷ் மாத்ரே முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தை நேராக சிக்ஸருக்கு அனுப்பினார். அதோடு நிற்காமல் மூன்றாவது பந்தையும் சிக்ஸருக்கு விரட்டினார். தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்கள் அடித்த பிறகும் ஆயுஷ் திருப்தி அடையவில்லை.

நான்காவது பந்தில் 4 ரன்கள், ஐந்தாவது பந்தில் 4 ரன்கள் மற்றும் ஆறாவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் என அர்ஷத் கானின் முதல் ஓவரிலேயே 28 ரன்கள் விளாசி சிஎஸ்கே அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளித்தார்.

சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே

ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசிய பிறகு, ஆயுஷ் மாத்ரே அதிக நேரம் களத்தில் நீடிக்கவில்லை. 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 34 ரன்கள் எடுத்த ஆயுஷை பிரசித் கிருஷ்ணா தனது அற்புதமான பந்து வீசி ஆட்டமிழக்கச் செய்தார்.

பிரசித் கிருஷ்ணாவின் ஐந்தாவது ஸ்டம்புக்கு வெளியே வந்த நல்ல லென்த் பந்தில் ஆயுஷ் ஸ்விங் செய்து அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டின் விளிம்பில் பட்டு முகமது சிராஜ் கைகளில் சிக்கியது. இதன் மூலம் ஆயுத் மாத்ரேவின் அற்புதமான ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆயுஷ் மாத்ரே

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சீசனின் பாதியில் தான் இணைந்தார். சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றாலும், அவரது அபாரமான பேட்டிங் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

கடந்த 5 இன்னிங்ஸில் ஆயுஷ் மாத்ரே 32, 30, 94, 48 மற்றும் 34 ரன்கள் எடுத்துள்ளார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்க நெருங்கி வந்த அவர் 94 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?