தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் நடப்பு சாம்பியன் – 3ஆவது முறையாக 200 ரன்களுக்குள் ஆல் அவுட்!

Published : Oct 30, 2023, 11:35 AM IST
தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் நடப்பு சாம்பியன் – 3ஆவது முறையாக 200 ரன்களுக்குள் ஆல் அவுட்!

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது முதல் 3ஆவது முறையாக இங்கிலாந்து 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியுள்ளது.

இங்கிலாந்திற்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், அடில் ரஷீத் மற்றும் மார்க் வுட் ஆகியோரை கிளீன் போல்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். மேலும், இங்கிலாந்து அணியானது தொடர்ந்து 3ஆவது முறையாக 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியுள்ளது. லக்னோவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், அதிகபட்சமாக ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுக்கவே இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 229 ரன்கள் குவித்தது.

IND vs ENG: இந்தியாவின் சாதனை பட்டியலில் இதுவும் ஒன்னு – 6 போல்டு, ஒரு கேட்ச், 2 எல்பிடபிள்யூ, ஒரு ஸ்டெம்பிங்!

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், மலான் 16 ரன்கள் எடுத்திருந்த போது ஜஸ்ப்ரித் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஜோ ரூட் கோல்டன் டக் முறையில் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் சிறந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 10 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஷமி பந்தில் கிளீன் போல்டானார்.

India vs England: வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்து!

அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 10 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். அப்போது இங்கிலாந்து 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து வந்த மொயீன் அலி 15 ரன்களில் ஷமி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வந்த கிறிஸ் வோக்ஸ் 10 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால், அதற்கு முன்னதாவே குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்க வேண்டியது. நடுவரிடம் அப்பீலும் கேட்கவில்லை, ரெவியூவும் எடுக்கப்படவில்லை. ஆதலால், அவர் அப்போதே அவுட்டிலிருந்து தப்பித்தார். எனினும், குல்தீப் யாதவ் பந்திலேயே கடைசியாக ஆட்டமிழந்துள்ளார்.

India vs England: கேப்டனாக ரோகித் சர்மாவின் 100ஆவது போட்டி – இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

அடுத்து ஷமி பந்தில் அடில் ரஷீத் 13 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக மார்க் வுட் கோல்டன் டக் முறையில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். இதன் மூலமாக இங்கிலாந்து 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒரு கேப்டனாக ரோகித் சர்மாவின் 100ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலமாக தொடர்ந்து 6ஆவது போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், அடில் ரஷீத் மற்றும் மார்க் வுட் என்று 6 வீரர்கள் கிளீன் போல்டு முறையில் ஆட்டமிழந்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக கிழக்கு ஆப்பிரிக்கா அணியின் 7 வீரர்கள் கிளீன் போல்டு முறையில் ஆட்டமிழந்துள்ளனர்.

IND vs ENG: பேட்டிங்கில் ரோகித், சூர்யகுமார் பொறுப்பான ஆட்டம், பவுலிங்கில் மாஸ் காட்டிய ஷமி, பும்ரா, குல்தீப்!

மேலும் இங்கிலாந்து 200 ரன்களுக்குள் 3ஆவது முறையாக ஆல் அவுட்டாகியுள்ளது. இதற்கு முன்னதாக எந்த உலகக் கோப்பை போட்டியிலும் இங்கிலாந்து 200 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோவில் நடந்த 29ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

India vs England: உலகக் கோப்பையில் மோசமான சாதனை படைத்த விராட கோலி; இங்கிலாந்திற்கு எதிராக 11 முறை டக் அவுட்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!