கடைசி வரை டிமிக்கி கொடுத்த ரூட் – பவுலர்களை காலி செய்த டீம் இந்தியா - இங்கிலாந்து 353 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumarFirst Published Feb 24, 2024, 11:21 AM IST
Highlights

இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்த் 353 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் செய்தது. இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆகாஷ் தீப் வேகத்தில் இஞ்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், பென் டக்கெட் 11 ரன்களில் ஆகாஷ் தீப் பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஆலி போப் ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ஜாக் கிராவ்லி 42 ரன்களில் ஆகாஷ் தீப் பந்தில் கிளீன் போல்டானார்.

Latest Videos

அடுத்து வந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். ஒரு கட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் 38 ரன்களில் நடையை கட்டினார். இதில், ஒரு சிக்சர் மற்றும் 4 பவுண்டரி அடங்கும். அதன் பிறகு வந்த பென் ஃபோக்ஸ் மற்றும் ரூட் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து கொடுத்தனர். இதில், ஃபோக்ஸ் 47 ரன்களில் சிராஜ் பந்தில் வெளியேறினார்.

அடுத்து வந்த டாம் ஹார்ட்லி 13 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஆலி ராபின்சன் களமிறங்கினார். அவர் 8 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனால், ஆனால், நடுவர் குமார் தர்மசேனா அவுட் கொடுக்கவில்லை. இந்தியாவிடமும் ரெவியூ இல்லை. தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 31ஆவது சதத்தை இன்று பூர்த்தி செய்தார்.

முதல் நாளில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து ரூட் 106 ரன்களுடனும், ராபின்சன் 31 ரன்களுடனும் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில், ராபின்சன் கூடுதலாக 27 ரன்கள் குவித்து 58 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டியில் ராபின்சன் அடித்த முதல் அரைசதம் ஆகும். ஆனால், ராபின்சன் 8 ரன்களில் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஆனால், அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இந்திய அணியிடம் ரெவியூ இல்லாததால், ரோகித் சர்மாவால் ரெவியூ எடுக்கமுடியவில்லை. அடுத்து வந்த சோயிப் பஷீர் ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 0 ரன்களில் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக இங்கிலாந்து 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்கள் குவித்தது. இதில், ரூட் மட்டும் நிதானமாக விளையாடி 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

click me!