#INDvsENG குவாரண்டின் முடிந்து களத்தில் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள்..!

By karthikeyan VFirst Published Jan 30, 2021, 10:08 PM IST
Highlights

குவாரண்டின் முடிந்து சென்னையில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
 

இலங்கை சென்ற இங்கிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கையை ஒயிட்வாஷ் செய்து வென்றது. இலங்கையை ஒயிட்வாஷ் செய்த கையோடு இந்தியாவிற்கு வந்துள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில்லும் நடக்கவுள்ளன. முதல் 2 டெஸ்ட் சென்னையில் நடக்கவிருப்பதை ஒட்டி, இலங்கை தொடரை முடித்துக்கொண்டு கடந்த வாரம் சென்னை வந்த இங்கிலாந்து வீரர்கள், ஒரு வாரம் குவாரண்டினில் இருந்தனர். 

குவாரண்டினை முடித்துக்கொண்டு இன்று(30ம் தேதி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கினர் இங்கிலாந்து வீரர்கள். பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு கடினமான இந்திய அணியை, அதுவும் ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்ற உத்வேகத்திலும் உற்சாகத்திலும் இருக்கும் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்பதை உணர்ந்துள்ள இங்கிலாந்து வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி:

ஜோ ரூட்(கேப்டன்), ஆர்ச்சர், மொயின் அலி, ஆண்டர்சன், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், பட்லர், ஜாக் க்ராவ்லி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டோமினிக் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.
 

click me!