தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர்களை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.
தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. லண்டன் லார்ட்ஸில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க அணி:
டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, கீகன் பீட்டர்சன், எய்டன் மார்க்ரம், ராசி வாண்டர் டசன், கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.
இதையும் படிங்க - 3 & 4வது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியாவிற்கு கடினமான போட்டிகள்..! முழு போட்டி பட்டியல்
இங்கிலாந்து அணி:
அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், மேட்டி பாட்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ்(5), ஜாக் க்ராவ்லி (9) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
சீனியர் வீரர் ஜோ ரூட்(8), ஜானி பேர்ஸ்டோ(0), கேப்டன் பென் ஸ்டோக்ஸ்(20), பென் ஃபோக்ஸ்(6) ஆகியோரும் சொதப்பினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய ஆலி போப் அரைசதம் அடித்தார்.
இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து
31.4 ஓவரில் 116 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. 32 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டம் 32 ஓவருடன் முடிக்கப்பட்டது. 32 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.
61 ரன்களுடன் களத்தில் இருந்த ஆலி போப் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் 2வது நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆலி போப் 73 ரன்களுக்கு ரபாடாவின் பந்தில் போல்டாகி வெளியேற, அதன்பின்னர் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய இருவரையும் ரபாடா வீழ்த்தினார். 165 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.
தென்னாப்பிரிக்க அணியில் அபாரமாக பந்துவீசிய ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நோர்க்யா 3 விக்கெட்டுகளும், மர்கோ யான்சென் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.