இந்தியாவில் ஆடுன சமயத்துல கிரிக்கெட்டையே வெறுத்துட்டேன்..! இங்கிலாந்து வீரர் ஓபன் டாக்

Published : Apr 25, 2021, 05:26 PM IST
இந்தியாவில் ஆடுன சமயத்துல கிரிக்கெட்டையே வெறுத்துட்டேன்..! இங்கிலாந்து வீரர் ஓபன் டாக்

சுருக்கம்

இந்திய சுற்றுப்பயணத்தின்போது, கிரிக்கெட்டையே வெறுத்ததாக இங்கிலாந்து ஸ்பின்னர் டோமினிக் பெஸ் தெரிவித்துள்ளார்.  

இங்கிலாந்து அணி ஐபிஎல்லுக்கு முன்பாக இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணத்தில் ஆடியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆடியதால், வீரர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தனர்.

2 மாதம் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பது மிகக்கடினம். அந்தவகையில், இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசிய டோமினிக் பெஸ், கொரோனா வளையத்தில் இருந்த காலத்தில் கிரிக்கெட்டையே வெறுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டோமினிக் பெஸ், இந்திய சுற்றுப்பயணத்துக்கு பிறகு ஒரு பிரேக் எடுத்துக்கொண்டேன். கொரோனா வளையத்தில் இருந்தது கடினமான காலம். அந்த அழுத்தம் நிறைந்த நெருக்கடியான நேரத்தில் கிரிக்கெட்டையே வெறுக்க தொடங்கிவிட்டேன்.  

நமக்கு சாதகமாக அனைத்தும் சென்றால், கொரோனா வளையம் கடினமாக இருக்காது. ஆனால் நமக்கு சாதகமாக இல்லாத நிலையில், மிகக்கடினமாக இருக்கும். அப்படித்தான் தனக்கு இருந்ததாக டோமினிக் பெஸ் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

WPL 2026: RCB VS DC: டெல்லியை பந்தாடி கோப்பையை தட்டித் தூக்கிய ஆர்சிபி! ஸ்மிருதி மந்தனா ருத்ரதாண்டவம்!
T20 உலகக்கோப்பை 2026: பாகிஸ்தான் செய்வது நியாயமா? சூர்யகுமார் சொன்ன 'நச்' பதில்!