வானவேடிக்கை காட்டிய வார்னர், ரிஷப் பண்ட் – 191 ரன்கள் குவித்த டெல்லி கேபிடல்ஸ்!

Published : Mar 31, 2024, 09:33 PM IST
வானவேடிக்கை காட்டிய வார்னர், ரிஷப் பண்ட் – 191 ரன்கள் குவித்த டெல்லி கேபிடல்ஸ்!

சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 13ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில், அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர், ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 62ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்து முஷ்தாபிஜூர் ரஹ்மான் பந்தில் பதிரனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வார்னர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 50 ரன்களுக்கு மேல் 110 முறை எடுத்து கிறிஸ் கெயில் சாதனையை சமன் செய்தார்.

இவரைத் தொடர்ந்து பிரித்வி ஷா 27 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 43 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக தோனி டி20 கிரிக்கெட்டில் 300 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 18 ரன்னிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 ரன்னிலும் பதிரனாவின் யார்க்கர் பந்தில் கிளீன் போல்டானார்கள்.

நிதானமாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதன் பிறகு அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். 31பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 16ஆவது அரைசதம் அடித்தார். மேலும், அவர் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 51 ரன்கள் எடுத்த நிலையில் பதிரனா பந்தில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. பவுலிங் தரப்பில் சிஎஸ்கே அணியில் மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முஷ்தாபிஜூர் ரஹ்மான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீச தடை.. பாதியில் பந்தை புடுங்கிய நடுவர்.. என்ன நடந்தது?