#ENGvsIND 4வது டெஸ்ட்: இந்திய அணி இந்த 2 மாற்றங்களை கண்டிப்பா செய்யும்..! ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 29, 2021, 2:54 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆனது. எனவே தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.

இந்த தொடரின் முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. முதல் டெஸ்ட்டிலிருந்தே முன்னாள் வீரர்கள் பலரும் அஷ்வினை அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். ஆனால் கண்டிஷனை காரணம் காட்டி அஷ்வின் அணியில் சேர்க்கப்படுவதேயில்லை.

3வது டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 2ம் தேதி லண்டன் ஓவலில் நடக்கும் 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்தவகையில், அஷ்வின் மற்றும் ஷர்துல் தாகூரை இந்திய அணியில் சேர்ப்பது குறித்த ரசிகரின் கேள்விக்கு ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக், ரவீந்திர ஜடேஜாவுக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அடுத்த போட்டியில் அவர் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக அஷ்வின் ஆடுவார். ஷர்துல் தாகூர் நன்றாக ஸ்விங் செய்வார். நன்றாக பேட்டிங்கும் ஆடுவார். அஷ்வின் பவுலிங்கில் பந்து நன்றாக திரும்புவதுடன், நன்றாக பவுன்ஸும் ஆகும். எனவே இந்திய அணியில் இந்த 2 மாற்றங்கள் செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இஷாந்த் சர்மா அடுத்த போட்டியில் ஆட வாய்ப்பில்லை என்று பிராட் ஹாக் தெரிவித்தார்.
 

click me!