இந்திய டெஸ்ட் வீரர்களுக்கு சம்பளத்துடன் போனஸையும் கொடுக்க முடிவு செய்த பிசிசிஐ!

Published : Feb 27, 2024, 01:59 PM IST
இந்திய டெஸ்ட் வீரர்களுக்கு சம்பளத்துடன் போனஸையும் கொடுக்க முடிவு செய்த பிசிசிஐ!

சுருக்கம்

இந்திய அணியின் டெஸ்ட் வீரர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி ஊக்கத் தொகையும் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ராஜ்கோட்டில் நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசியாக நேற்று முடிந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்று கைப்பற்றியது. இந்த நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி போனஸ் தொகையும் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனால், இதற்கு இஷான் கிஷான் தான் காரணமாக சொல்லப்படுகிறது. தனக்கு அணியில் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டு விலகினார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் இஷான் கிஷான் இடம் பெற்று விளையாடவில்லை.

வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக ஜிம்மில் ஹெவியான ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான் 4ஆவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்று விளையாடிய நிலையில், இனி வரும் தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக போனஸ் அளிக்க முன்வந்துள்ளது.

இனி வரும் டெஸ்ட் தொடர்களில் இடம் பெற்று விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் போன்ஸ் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. தற்போது பிசிசிஐ மூலமாக ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் என்று சமபளம் வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் டெஸ்ட் தொடர்களில் சம்பளம் மட்டுமின்றி வருட கடைசியில் போனஸ் தொகையும் வீரர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

விராட் கோலி vs ரோஹித் சர்மா: இந்தூர் ஒருநாள் போட்டியின் கிங் யார்?
350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!