பிப்ரவரி 18 முதல் விஜய் ஹசாரே தொடர்..! பிசிசிஐ அதிரடி

Published : Feb 01, 2021, 04:45 PM IST
பிப்ரவரி 18 முதல் விஜய் ஹசாரே தொடர்..! பிசிசிஐ அதிரடி

சுருக்கம்

பிப்ரவரி 18ம் தேதி முதல் உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் நடத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.  

பிப்ரவரி 18ம் தேதி முதல் உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் நடத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு உள்நாட்டு போட்டி தொடர்கள் எதுவும் நடக்கவில்லை. நிலைமை சீரடைந்ததை அடுத்து, ஜனவரி 10ம் தேதி தொடங்கி சையத் முஷ்டாக் அலி தொடர் நேற்று(ஜன 31) முடிந்தது.

இந்நிலையில், உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளது. அதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடர் நடந்த பெங்களூரு, இந்தூர், கொல்கத்தா, மும்பை, பரோடா ஆகிய மைதானங்களில் விஜய் ஹசாரே போட்டிகளும் நடக்கவுள்ளன.

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி சையத் முஷ்டாக் அலி தொடரை நடத்திய அனுபவம் அந்த கிரிக்கெட் சங்கங்களுக்கு இருக்கும் என்பதால், விஜய் ஹசாரே லீக் போட்டிகளும் அங்கேயே நடத்தப்படுகின்றன.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: இ-சிகரெட் முதல் போன் வரை.. வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட செக்! இனி இதுக்கெல்லாம் தடா!
yuzvendra chahal: விமானத்தில் சாஹல் செய்த விபரீதம்: சிக்கிய வீடியோ... முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?