இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ..! எந்தெந்த பிரிவில் எந்தெந்த வீரர்கள்?

By karthikeyan VFirst Published Apr 15, 2021, 10:27 PM IST
Highlights

இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
 

ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடும் வீரர்களை ஏ+, ஏ, பி, சி ஆகிய பிரிவுகளாக பிரித்து ஊதிய ஒப்பந்தத்தை வெளியிடும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

28 வீரர்கள் பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஏ+ பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.7 கோடி) - விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா.

ஏ பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.5 கோடி) - ரவிச்சந்திரன் அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, தவான், கேஎல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா.

பி பிரிவில் உள்ள வீரர்கள்(ரூ.3 கோடி) - ரிதிமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், மயன்க் அகர்வால்.

சி பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.1 கோடி) - குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, அக்ஸர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.
 

click me!