#INDvsENG இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு..! 3 வீரர்களுக்கு முதல் வாய்ப்பு

By karthikeyan VFirst Published Mar 19, 2021, 2:46 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என வென்றது. அடுத்ததாக டி20 தொடர் நடந்துவருகிறது. 4 டி20 போட்டிகள் முடிந்த நிலையில் 2-2 என தொடர் சமனடைந்துள்ளது. கடைசி டி20 போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கவுள்ளது.

டி20 தொடர் முடிந்ததும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. அந்த தொடருக்கான 18 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவ், க்ருணல் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

ரிஷப் பண்ட் 14 மாதங்கள் கழித்து மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்பின்னர்களாக சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா ஆகியோரும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், நடராஜன், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஒருநாள் அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர். 
 

click me!