வார்னர், ஸ்மித் அதிரடி: முதல் நாளில் ஆஸி, 339 ரன்கள் குவிப்பு!

Published : Jun 29, 2023, 12:29 AM IST
வார்னர், ஸ்மித் அதிரடி: முதல் நாளில் ஆஸி, 339 ரன்கள் குவிப்பு!

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி தற்போது ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது.

ஜடேஜா எல்லா போட்டியிலும் விளையாடினால் அவர் தான் அதிக விக்கெட் எடுப்பார் – முத்தையா முரளிதரன்!

இதில் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் ஆஸி அணியின் ரன் கணக்கை தொடங்கினர். முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

சாய் கிஷோர், விஜய் சங்கர் அதிரடியால் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 173 ரன்கள் குவிப்பு!

அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிட் ஹெட் இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஒரு கட்டத்தில் டிராவிஸ் ஹெட் 77 ரன்களாக எடுத்திருந்த போது ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழ்ந்தார். அதன் பிறகு வந்த கேமரூன் க்ரீன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

ஒருபுறம் நிதானமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்கள் எடுத்திருந்த போது அதிவேகமாக 9000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். அதன் பிறகு அரைசதம் அடித்தார். தற்போது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இதில், ஸ்மித் 85 ரன்களும், அலெக்ஸ் கேரி 11 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

புதிதாக அமைக்கப்பட்ட அவுட்பீல்டில் 5 முக்கியமான போட்டிகள் - இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் ஹேப்பி

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs NZ: சிஎஸ்கே முன்னாள் வீரர் ருத்ரதாண்டவம்.. 2வது ஓடிஐயில் இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து!
IND vs NZ: அதிரடி வீரர் கணித்தபடியே 2வது ஓடிஐயில் சொதப்பிய ரோகித், விராட் கோலி.. யார் சாமி இவரு!