இந்தியா ஸ்கோரை எடுத்து ஆஸி., முன்னிலை: ஸ்மித், ஹெட் விக்கெட்டை தட்டி தூக்கிய ஜடேஜா!

Published : Jun 10, 2023, 12:09 AM ISTUpdated : Jun 10, 2023, 12:11 AM IST
இந்தியா ஸ்கோரை எடுத்து ஆஸி., முன்னிலை: ஸ்மித், ஹெட் விக்கெட்டை தட்டி தூக்கிய ஜடேஜா!

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 3ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவென் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.

வார்னர் அவுட் ஆனது கூட தெரியாமல் தூங்கிய மார்னஷ் லபுஷேன்!

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணிக்கு நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 48 ரன்னிலும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்னிலும், அஜிங்கியா ரஹானே 89 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 173 ரன்கள் பின்னிலை பெற்றது.

அவுட்டுன்னு நடையை கட்டிய ஆஸி வீரர்கள், சிராஜ் கேட்ட ரெவியூவால் திரும்ப வந்து பந்து வீசிய க்ரீன்!

பின்னர் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் 1 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும், ஸ்டீவென் ஸ்மித் 34 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டீவென் ஸ்மித் விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா 8ஆவது முறையாக கைப்பற்றியுள்ளார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கைப்பற்றிய ஜடேஜா, 2ஆவது இன்னிங்ஸில் 2 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

IND Vs AUS Live Score Day 3: பாலோ ஆன் தவிர்த்த இந்தியா, கடைசியாக 296க்கு ஆல் அவுட்; ரஹானே 89, தாக்கூர் 51!

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 1902 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் அதிகபட்சமாக 4 ஆது இன்னிங்ஸ் ரன் சேஸ் 263 ரன்கள் ஆகும். ஆனால், 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!