Ambati Rayudu YSR Congress Party: ழுழுசா 10 நாள் கூட ஆகல – அதுக்குள்ள இப்படியொரு முடிவு எடுத்த அம்பதி ராயுடு!

Published : Jan 06, 2024, 11:58 AM IST
Ambati Rayudu YSR Congress Party: ழுழுசா 10 நாள் கூட ஆகல – அதுக்குள்ள இப்படியொரு முடிவு எடுத்த அம்பதி ராயுடு!

சுருக்கம்

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து முழுசா 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்தும் சிறிது காலம் ஒதுங்குதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர் ஆந்திராவைச் சேர்ந்த அம்பதி ராயுடு. கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் அம்பதி ராயுடு 19 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக சாம்பியனானது.

 

 

இந்த தொடருடன் அம்பதி ராயுடு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போதே அம்பதி ராயுடு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த 28ஆம் தேதி அம்பதி ராயுடு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

T20 World Cup 2024 Schedule: இந்தியா, பாகிஸ்தான் ஒரே குரூப், ஏன் தெரியுமா – ஐசிசியின் பக்கா பிளான்!

அப்போது, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி ஆகியோர் இருந்தனர். இது குறித்து ஒய்எஸ்ஆர் காங்கரிஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், கூறியிருப்பதாவது: அம்பாதி ராயுடு, முதல்வர் ஜெகன்மோகன் முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு – குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

இந்த நிலையில் தான் கட்சியில் இணைந்து 10 நாட்கள் கூட முழுமையாக ஆகாத நிலையில் இன்று காலை அம்பதி ராயுடு தனது எக்ஸ் பக்கத்தில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை குறிப்பிட்டிருக்கிறார். அதில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இது. மேலும் நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலில் கிரிக்கெட் இப்போ அரசியல் - ஆடுகளத்தை மாற்றி களமிறங்கிய அம்பதி ராயுடு – அடுத்து தேர்தல் பிரச்சாரம்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!