ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை காண, 50% ரசிகர்களை, அதுவும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை காண, 50% ரசிகர்களை, அதுவும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
எஞ்சிய 31 போட்டிகளை, இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததும், செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில்நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
கடந்த சீசன் முழுவதுமே அமீரகத்தில் தான் நடந்தது. ஆனால் ரசிகர்கள் இல்லாமல் காலி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடந்தன. ஆனால் இந்த சீசனை, 50% பார்வையாளர்களுடன் நடத்த அமீரகம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த 50% பார்வையாளர்களாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.