#IPL2022-ல் அறிமுகமாகும் 2 புதிய அணிகளை கைப்பற்ற போட்டியிடும் 4 பணக்காரர்கள்..!

Published : Jul 05, 2021, 04:17 PM IST
#IPL2022-ல் அறிமுகமாகும் 2 புதிய அணிகளை கைப்பற்ற போட்டியிடும் 4 பணக்காரர்கள்..!

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக அறிமுகமாகவுள்ள 2 அணிகளை வாங்க 4 கோடீஸ்வரர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது.  

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது.

அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதுவரை 8 அணிகள் ஐபிஎல்லில் ஆடிவரும் நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

மெகா ஏலம் நடக்கவுள்ளதால், ஒவ்வொரு ஐபிஎல் தலா 4 வீரர்களை(2 இந்திய வீரர்கள் + 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் + 1 வெளிநாட்டு வீரர்) மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை கழட்டிவிட வேண்டும். மெகா ஏலம் வரும் டிசம்பர் இறுதியில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 புதிய அணிகளுக்கான டெண்டர் ஆகஸ்ட் மாத மத்தியில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2 புதிய அணிகளை வாங்க 4 கோடீஸ்வரர்களுக்கு இடையே போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா க்ரூப், அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அதானி க்ரூப், ஹைதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் அரவிந்தா ஃபார்மா லிமிடெட் மற்றும் குஜராத்தில் இயங்கும் டொரெண்ட் க்ரூப் ஆகிய 4 நிறுவங்களும் 2 புதிய ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

லண்டனுக்கு தனி விமானம் கேட்டேனா? வதந்திக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி!
ஆர்சிபி விற்பனையில் திடீர் ட்விஸ்ட்.. திடீரென களத்தில் குதித்த இந்திய கார்ப்பரேட் ஜாம்பவான்!