விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி கைது... பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

Published : Sep 06, 2021, 12:27 PM IST
விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி கைது... பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

சுருக்கம்

கடலூர் கூத்தப்பக்கம் பகுதியில் விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி குமார், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க அஷ்வத்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி சிலை அமைக்க, அனுமதி தர இன்னும் காலம் இருக்கிறது. அனுமதி மறுத்தால் விநாயகர் சதுர்த்தி துவங்கி மூன்று நாட்களுக்கு ஒரு லட்சம் பாஜகவினர் தத்தம் வீட்டு வாசல்களில் விநாயகரை வைத்து  வழிபாடு செய்வோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

இந்நிலையில், ‘’கடவுளை வைத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் செய்ய வேண்டாம். ஒன்றிய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’’ என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கடலூர் கூத்தப்பக்கம் பகுதியில் விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி குமார், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க அஷ்வத்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

இஸ்ரேல்-ஈரான் மோதல்..! சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல்..! தவிக்கும் இந்தியா..!
மார்ச் 21-ல் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் புதன்.! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறீங்க.!