விஜயபாஸ்கரின் பினாமி வீடுகளில் சோதனை.. பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அதிகாரிகள்.. அலறும் அதிமுக.

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2021, 10:54 AM IST
Highlights

இந்த பரபரப்பு  அடங்குவதற்குள் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளரின் நண்பர் சந்திரசேகருக்கு சொந்தமான அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமிகளின் வீடு மற்றும் அலுவலகங்களின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களின் வீடு அலுவலகங்கன் என 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். அச்சோதனையின்போது ஏராளமான சொத்து ஆவணங்கள், நகை பணம் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படியுங்கள்: இந்தியா சக்தி மிக்க நாடு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி பெருமிதம்.

இந்த பரபரப்பு  அடங்குவதற்குள் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளரின் நண்பர் சந்திரசேகருக்கு சொந்தமான அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்துறை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய உதவியாளர், சரவணன் வீடு நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், மற்றொரு உதவியாளர் முருகன் வீடு உட்பட 4 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  கடந்த 18ஆம் தேதி விஜயபாஸ்கரின் வீடு உறவினர்கள் வீடு என 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே சென்னையிலுள்ள விஜயபாஸ்கரின் பினாமி சரவணன் சந்திரசேகரன் ஆகியோர் வீடுகள் மற்றும் இரண்டு நிறுவனங்கள் சோதனை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: திடீரென தண்டவாளத்தில் படுத்த காதல் ஜோடி.. அலறிய பயணிகள்.. கண்ணிமைக்கு நேரத்தில் நடந்த பயங்கரம்.

ஆனால் அப்போது அங்கு வீடு  பூட்டப்பட்டிருந்ததுடன் அங்கு யாரும் இல்லை, இதனால் மொத்தம் நான்கு இடங்களுக்கு விஜிலென்ஸ் அதிகாரிகள் அன்று சீல் வைத்தனர். இந்நிலையில் இன்று அந்த 4 இடங்களிலும் பூட்டை உடைத்து சோதனை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். அதனடிப்படையில் இன்று சரவணன் வீடு மற்றும் சந்திரசேகரன் வீட்டின் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  உள்ளே முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோதனை விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!