உருக்கமாக பேசிய ஸ்டாலின்... மேடையில் குலுங்கி குலுங்கி அழுத வைகோ!! கரகோஷத்தால் அதிர்ந்த அரங்கம்...

By sathish kFirst Published Feb 25, 2019, 1:55 PM IST
Highlights

 மதிமுக சார்பில் கருணாநிதிக்காக நடத்தப்பட்ட விழாவில் கலைஞர் - வைகோ உறவு குறித்து ஸ்டாலின் பேசும்போதே குலுங்கி குலுங்கி அழுத சம்பவம் தொண்டர்களை நெகிழ வைத்துள்ளது.

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மதிமுக சார்பில், வைகோ தலைமையில், 'தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழா'வும் மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபாண்டியன் எழுதிய 'தமிழின் தொன்மையும் சீர்மையும் - கலைஞர் உரை' என்ற நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இந்த விழாவில் ஸ்டாலின் பேசும்போது; ‘‘மதிமுக சார்பில் கலைஞருக்கு விழாவா? வைகோவுக்கு அருகில் ஸ்டாலினா? என்று சிலருக்கு சந்தேகம். இல்ல...  வயிற்றெரிச்சல், பொறாமை. திராவிட இயக்கத்தினர் ஒன்று சேர்ந்தால் சிலருக்கு எரிச்சல். கலைஞரால் போர் வாள் என்றழைக்கப்பட்டவர் அண்ணன் வைகோ. தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில்  திராவிட இயக்கத்தைக் காக்க இணைந்துள்ளோம். வயது முதிர்ந்த நிலையில் தலைவரைச் சந்தித்த போது, "அண்ணா உங்களுக்கு இருந்தது போல் ஸ்டாலினுக்கும் நான் துணையாக இருப்பேன்" என்றார். அண்ணன் வைகோ. இதை பலமுறை கூறியுள்ளார்.

அண்ணன் வைகோ அவர்களே, நீங்கள் எனக்குத் துணையாக இருப்பது மட்டுமல்ல, நானும் உங்களுக்குத் துணையாக நிற்பேன் என்று வாக்குறுதி கொடுக்கத்தான் இந்த விழாவுக்கே வந்தேன்" என்று அவர் கூற அரங்கமே இரு கட்சி தொண்டர்கள் கரகோஷத்தால் விழா திடல் அதிர்ந்தது.

உணர்ச்சி போங்க பேசிய ஸ்டாலினின் பேச்சை கேட்ட மேடையில் அமர்ந்திருந்த வைகோ நெகிழ்ந்து கண் கலங்கினார்.  கலைஞர் - வைகோ உறவு குறித்து ஸ்டாலின் பேசும்போதே நெகிழ்ந்து காணப்பட்ட வைகோ, ஸ்டாலின் தனக்கு துணையாக நிற்பேன் என்ற வாக்குறுதியை அளிக்கத்தான் இந்த விழாவுக்கே வந்தேன் என்று கூறியபோது உடைந்து கண் கலங்கி தனது கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்ட அவர் சிறிது நேரம் குலுங்கி குலுங்கி அழுதார்.  

click me!